Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

Monday, 27 August 2012

தூத்துக்குடியில் செல்லப்பிராணிகள் கண்காட்சி




தூத்துக்குடியில், மாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி, நேற்று மாலை செல்லப் பிராணிகள் கண்காட்சி நடந்தது. 16 வகையிலான 146 நாய்கள் பங்கேற்றன. நெல்லையிலிருந்து பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி தனிமாவட்டமாக உதயமாகி, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை யொட்டி,"வெள்ளிவிழா', முத்துவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

இதன் ஒருபகுதியாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், செல்லப்பிராணிகள் கண்காட்சி நேற்று மாலை, இங்குள்ள"முத்துநகர்' கடற்கரையில் நடத்தப்பட்டது.  தூத்துக்குடியைச் சேர்ந்த, ஜெர்மன் ஷெப்பர்டு, புல்மாஸ்டிப், பொமோரியன், ராட் விலர்,ராஜபாளையம், நாட்டு வகை என மொத்தம் 16 வகையிலான, 146 நாய்கள் பங்கேற்றன.

 நாய்க்குட்டி கண்காட்சி, நாய்களின்அடைஅலங்கார அணிவகுப்பு, எஜமானர் இடும் கட்டளைக்கு கீழ்ப்படிதல், உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. ஆடு, ஒட்டகமும் இதில் பங்கேற்றன. ஏற்பாடுகளை, டி.ஆர்.ஓ., அமிர்தஜோதிதலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Sunday, 12 August 2012

Boat race off Pearl City beach enthrals Tuticorin people



A boat race was conducted off Pearl City beach here on Sunday as part of silver jubilee celebrations to commemorate bifurcation of Tuticorin from Tirunelveli district. Fishermen racing in the boats carried placards of letters to highlight SILVER JUBILEE – 25 at the close of competition. The maiden event hosted by Fisheries Department under the initiative of Collector Ashish Kumar enthralled the spectators.

 Fifteen fishing boats with three fishermen in each set out to the sea from Vaan Island to Pearl City beach. Fishermen from various coastal hamlets, with national flags hoisted atop the vessels, competed with much vigour. The Inigo Nagar fishermen emerged victorious in the end.

Presiding over the programme, the Collector said that boat race should be a regular annual event in the Tuticorin calendar. Stressing the role of Indian Coast Guard and Marine Police, Mr. Kumar said that the personnel had been patrolling to safeguard fishermen and help them in distress.

Commandant S.M. Singh (Executive Officer), Indian Coast Guard Ship Veera, exhorted the fishermen to have safety equipment on board vessels and appealed them not to overexploit fishery resources, which must be conserved for the future. With exhibits of safety equipment, the Coast Guard personnel sensitised fishermen on safety measures. Stalls at the venue displayed search and rescue gadgets, speed boat, fire fighting and damage control equipment, distress call on emergency (1554) besides recruitment details for Indian Coast Guard service.


Fisherfolk had a gala time at the function. R. Amal Xavier, Joint Director of Fisheries; P. Pradip, Assistant Director of Fisheries (Marine); Prabavathi, Assistant Director, Fishing Harbour Management; and Vijayaraghavan, Fisheries Inspector, besides Marine Police personnel were present.





Mr. Kumar handed over a golden fish to the winners from Inigo Nagar. Students of various educational institutions entertained the audience with a dance programme. The Collector also honoured Sukumar, vice-president of Ind Bharat Thermal Power Limited, for having established high mast lights at the new beach.

Thursday, 9 August 2012

தூத்துக்குடியில் 12ம் தேதி படகு போட்டி


தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவையொட்டி வருகிற 12ம் தேதி வான்தீவிலிருந்து முத்துநகர் கடற்கரை வரை படகு போட்டி நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெள்ளிவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவையொட்டி வருகிற ஞாயிற்றுக் கிழமை (12ம் தேதி) மீன்வளத்துறை சார்பில் கலாச்சார வாரவிழா தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெறுகிறது. அன்று வான்தீவில் இருந்து முத்துநகர் கடற்கரை வரை நாட்டுப்படகு போட்டி நடக்கிறது. போட்டிகள் மாலை 5 மணி முதல் மாலை 6மணி வரை  நடக்கிறது. 

இதில், திரேஸ்புரம், இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்த 14 பைப்பர் படகுகளில் மீனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பின்னர் கடலோர காவல் படையினரின் கலை நிகழ்ச்சிகளும், முத்துநகர் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகளும், வான வேடிக்கைகளும் நடைபெற உள்ளன. விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். 

Friday, 3 August 2012

Pearl City Beach dedicated to Tuticorin populace

An instance of volunteering services of the police, says SP; it was created involving 200 police including women
 

The silver jubilee programme to mark the bifurcation of Tuticorin from Tirunelveli organised by the Tuticorin police, got off to a colourful start with a series of fireworks lighting up the sky on Sunday evening. Dedicating the Pearl City Beach, which has been established by the police on beach road here, to the Tuticorin populace, Superintendent of Police J. Rajendran said the police personnel had been rendering public service beyond the tasks assigned to them. Under the initiative of Mr. Rajendran, the Pearl City beach, which was previously termed as ‘police beach,’ was created involving 200 police personnel including women police. Taking pride in it, he said except Chennai no other coastal district across Tamil Nadu had witnessed such volunteering services of the police to set up a beach.

Electricity connections had been made at the beach in public interest. Drinking water connections had been made at 48 police stations across the district and the public had been utilising them well. Many of those involved in criminal activities had undergone social reformation, he said. Stressing upon reformation, he said a ‘silent revolution’ is on in Tuticorin.

 Meanwhile, he informed that spot fine system has come in to effect in Tuticorin and the police would crackdown on drunken drivers and helmetless drivers soon. With traffic regulations in effect to ease out congestion, vehicular traffic flow is being maintained in arterial roads of Tuticorin town.
A high score of 95 and 99 in academic subjects alone would not be the deciding factor for any student to achieve high ranks in civil services. Anybody with self confidence in achieving the target would be able to achieve the desired results, he said.



District Revenue Officer S. Amirtha Jothi spoke on the role of parenting. Nowadays, students at schools are becoming victims of pressure exerted by teachers and parents. Every student has to be provided with a chance to act on his or her own interest in choosing subjects to pursue higher education. It was unfortunate that desires of children were scuttled since they could not act on their own. Students of various educational institutions, police personnel and their children put up various shows on stage during the programme. Earlier, resounding reception was accorded to Collector Ashish Kumar and District Revenue Officer S. Amirtha Jothi.

Tuticorin revels in silver jubilee fest

District administration has chalked out various programmes to mark its bifurcation from Tirunelveli,

 
 
Tuticorin is in a celebratory mode with various programmes being charted out to mark the silver jubilee of the bifurcation of Tuticorin from Tirunelveli.

The maiden event in Tamil Nadu has become a significant programme launched by the district administration. Tuticorin is the first district to have witnessed such a maiden event.

The eight-month long celebratory programme to cherish the bifurcation of Tuticorin, a place historically known as the birth place of freedom fighters, began at Tuticorin Port beach on March 25. Minister for Labour Welfare S. T. Chellapandian, in the presence of Collector Ashish Kumar, launched a mega compact disc compiling a data of historical facts about Tuticorin.

Since the commencement of the jubilation programme, the district administration, which has formed several committees to organise a variety of cultural programmes, has been hosting programmes across the district.
On all Sundays, enthusiasts stage performances on the premises of newly-created Pearl City beach opposite Caldwell School. Officials in departments of various government organisations have been organising programmes every week. Scores of families have been witnessing the entertainment programmes with a variety, which will come to a close on October 21.

Kovilpatti, a commercial town in the district, is equally poised and well wishers of Kovilpatti have been involved in promoting the status of the town, which has all potential of emerging as a district headquarters, according to Silver Jubilee Programme Coordinator M. Paramasivam. Taking pride, he said with donor funding, a two-day celebratory programme was being organised every week on all Saturdays and Sundays since the commencement of ‘Muthu Vizha’ on May 5. Students of various educational institutions volunteered to showcase their talents for this significant programme.

Students have been competing in quiz programmes, folk arts, dances, and dramas highlighting the contributions of freedom fighters who hailed from Tuticorin, and debates involving familiar small screen personalities, staged at a venue near Shenbagavalliamman Temple in the centre of Kovilpatti.

Toppers in public examinations of class X and XII were honoured during the programme, which continues until October 8, when a cine star would entertain the Kovilpatti public. A huge venue would be readied to accommodate more than 5, 000 people at the valedictory programme.

To promote commercial activities in and around Kovilpatti, operations dealing with safety matches manufacturing would also be staged. Mr. Paramasivam also added that a mega medical camp would be organised for a few days. Since Kazhugumalai is a tourist spot, cultural programmes would be conducted there to attract more visitors. With cooperation of DHAN Tourism for Development, programmes would be conducted, Mr. Paramasivam added.

K.P. Bharathi, Programme Leader, DHAN Tourism for Development, said that preliminary works were on to host ‘Kazhugumalai Heritage Day’ soon. Efforts were being made to include Kazhugumalai in the UNESCO’s list of world heritage sites to attract foreigners’ attention.

Source:Hindu

Tuesday, 31 July 2012

தூத்துக்குடியில் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிவிழாவையொட்டி நடந்தது


 
தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளதால் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. 29.7.2012 மாலை பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தூத்துக்குடி முத்துநகர கடற்கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் சென்டை மேளத்துடன் ஆரம்பமானது. பின்னர், விஜய் டிவி புகழ் நீயா நானா இயக்குனர் ஆண்டனி சிறப்புரை ஆற்றினார். பின்னர், ரோபோ சங்கர், கிரி குழுவினரின் அசத்தலான நகைச்சுவை மற்றும் மிமிக்ரி நிகழ்ச்சிகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து விஜய் டிவி புகழ் விஜயன் வழங்கும் அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடந்தது.



பின்னர், வல்லநாடு இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் நெல்லை ஆர்ப்பிட் நடன பள்ளி மாணவ, மாணவியர்களின் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், சென்னை சாதக பறவைகள் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. 




நேற்றைய வெள்ளிவிழா கலைநிகழ்ச்சிகள் முழுவதும் முழுக்க முழுக்க பொழுது போக்கு அம்சங்களுடன் நடந்தது. சுமார் 5 மணிநேரம் பொதுமக்கள் கண்டுகளித்தனர். முதன்முறையாக திறந்தவெளியில் இலவசமாக நிகழ்ச்சிகள் நடந்ததால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பொது மேலாளர் எஸ். செல்வன்ராஜதுரை, ஏஎஸ்பி மகேஸ், உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந் கொண்டனர்.

Monday, 16 July 2012

காவல் துறை சார்பில் வெள்ளி விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள்



நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிந்து 25 ஆண்டுகள் ஆகிறது. 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மாவட்ட நிர்வாகம் வெள்ளி விழா கொண்டாடுவது என்று முடிவு செய்தது. இந்த வெள்ளி விழா கொண்டாட்ட தொடக்க விழா மார்ச் 25-ந் தேதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரையில் நடந்தது.

இதைதொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. கலை, கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் கோவில்பட்டியில் 1½  மாதமாக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதைதொடர்ந்து வெள்ளி விழா ஆண்டு சிறப்புகளை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் தொடக்க விழா தூத்துக்குடி வடக்கு பீச்ரோட்டில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள கடற்கரை பூங்காவில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் வெள்ளி விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்தஜோதி தலைமை தாங்கினார். மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி ரூரல் துணை எஸ்.பி. நாராயணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கலந்து கொண்டார்.


விழாவில் மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் பேசும் போது, தூத்துக்குடியில் உருவாக்கப்பட்ட இந்த புதிய பீச் உருவாக 2 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் பெரும் முயற்சியால் இந்த பீச் உருவாக்கப்பட்டு உள்ளது. போலீசாரும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஓய்வு நேரத்தில் இதை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு மக்களுக்காக இந்த பீச்சை அர்ப்பணித்து இருக்கிறோம்.



தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 500 ரவுடிகளை நேரடியாக அழைத்து விசாரணை செய்து அவர்களை ரவுடி பட்டியலில் இருந்து நீக்கி உள்ளேன். இது அவர்களுக்கு சமுதாயத்தில் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு ஆகும். மேலும் தூத்துக்குடி, கோவில்பட்டியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது. 


மாவட்டத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இனி குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் சிறை தண்டனை விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாததால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்படும். மேலும் தூத்துக்குடியில் ஸ்பாட் அபராதம் திட்டம் இன்று (அதாவது நேற்று) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு எஸ்.பி. பேசினார்.


தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் நகர துணை எஸ்.பி. மகேஷ், திருச்செந்தூர் எஸ்.பி. ஞானசேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் குமார், தாசில்தார் கலியூகவரதன், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Saturday, 23 June 2012

Silver jubilee of Tuticorin district bifurcation planned



The district administration has planned for a series of programmes for the silver jubilee of the district’s bifurcation from Tirunelveli.

A number of cultural programmes is in store at the newly established Pearl City beach adjacent to Nehru Park on beach road. The district administration has come out with a series of developments across the district to commemorate the bifurcation.

Artistes would perform a series of programmes on art and culture in different facets at the beach venue on all Sundays from July 1 to October 21, according to statement. Minister for Labour Welfare S.T. Chellapandian along with Collector Ashish Kumar paid a visit to the programme venue here on Saturday and took stock of arrangements. The Pearl City beach park would be spruced up with additional infrastructural developments at a cost of Rs.1.5 crore. The park would be augmented with facilities, including pathway and basic amenities. To maintain cleanliness, thorny shrubs would also be cleared at regular intervals. More importantly, the park would have two highmast lights at the beach park under MLA Development Funds to the tune of Rs.1.5 lakh.

Besides, Mr. Chellapandian expressed his wish to spruce up the Nehru Park on beach road under MLA funds at a cost of Rs. 5 lakh. Deputy Mayor P. Xavier, Revenue Divisional Officer, G. Latha, Tahsildar Kaliyugavaradhan, Executive Engineer of Corporation S.A. Rajagopalan, and others accompanied during the inspection.

பியர்ள் சிட்டி பீச்சில் வெள்ளி விழா நிகழ்ச்சிகள்


பியர்ள் சிட்டி பீச்சில் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் : அமைச்சர், ஆட்சியர் ஆய்வு

 

  

தூத்துக்குடி மதுராகோட்ஸ் எதிரில் அமைந்துள்ள பேர்ல் சிட்டி பீச்சில் வெள்ளி விழா தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் .சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.

ஜீலை 1ம் தேதி தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரையிலும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமை மாலையிலும் இந்த பேர்ல் சிட்டி பீச்சில் வெள்ளி விழா தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கடற்கரையில் ஏற்கனவே இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 

விரைவில் தன்னிறைவு திட்டம் மூலம் ரூ.1.5 கோடி அனுமதிக்கப்பட்டு புதிதாக மண் கொட்டுதல், பாதை அமைத்தல், குப்பைகள் மற்றும் முட்செடிகள் அகற்றுதல் போன்ற பணிகள் முழு மூச்சில் நடைபெறவுள்ளது. இக்கடற்கரையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கடற்கரையை ஒளிமயமாக மாற்றும் விதத்தில் ரூ.15 லட்சம் செலவில் இரண்டு ஜ மாஸ் விளக்குகள் (உயர் கோபுர விளக்கு) அமைத்திடவும், மேலும் நேரு கடற்கரை பூங்காவினை சீரமைத்திடவும்  சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் அனுமதித்திடவும் உள்ளார். 
                        
ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் சேவியர்,  தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் க.லதா, வட்டாட்சியர் கலியுகவரதன், மாநகராட்சி பொறியாளர் ராஜகோபால், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

“Protect environment from pollution”



SOCIAL CAUSE:Collector Ashish Kumar participating in a cycle rally in Tuticorin on Tuesday.—

: It was a different day out for Tuticorin Collector, who participated in cycle rally along with students to raise an awareness of the need to protect the environment from pollution.
The programme was organised by the Tamil Nadu Pollution Control Board, Tuticorin, in association with the district administration, as part of the World Environment Day.
As many as 400 students from 17 schools were involved in the rally, which commenced from Beach Park on beach road and proceeded through the thoroughfares of Tuticorin and concluded at Rajaji Park on Palayamkottai Road.

With much enthusiasm, the campaigners including Mr. Kumar, District Environment Engineer, TNPCB, Tuticorin, M. Murugan and the students sporting caps and scarves reached out to the public and highlighted the importance of conserving the greenery, marine eco system, other natural resources, eradicating polythene plastic bags banned by the government, enhancing forest cover, challenges to environment of industrial pollution and also on impacts of global warming.

Besides, 120 students from 28 schools competed in a quiz programme at Subbiah Vidyalayam Girls' Higher Secondary School. Earlier, the Collector inaugurated the plant sapling programme at the beach park. More than hundred saplings were planted.

Besides, officials in Department of Forests planted saplings in various parts of the district. J. Mahesh, Assistant Superintendent of Police, Tuticorin, Gladis Stelma, District Educational Officer, P. Rathinam and Kumaradoss, officials from Chief Educational Office and M. Pechimuthu, Coordinator of District Eco – Club, also took part in the programme.

Sunday, 20 May 2012

கோவில்பட்டியில் வெள்ளிவிழா கலைநிகழ்ச்சிகள்


தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் முன்பு உள்ள கலையரங்கில் வெகுசிறப்பாக  நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் மூன்றாம்நாள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கோவில நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் ஜான்சிராணி, அதிமுக மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் சங்கரபாண்டியன், சண்முகசுந்தரம், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேஷ‌னல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவரும், வெள்ளிவிழாக்குழு ஒருங்கிணைப்பாளருமான பரமசிவம் வரவேற்றார். தொடர்ந்து பேராசிரியர் சங்கர்ராஜன் தலைமையில் வினாடிவினா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மதுரை ஹார்விபட்டி முருகேசன் கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது. இறுதியில் மாவட்ட வெள்ளிவிழா கலைபண்பாட்டு உறுப்பினரும், ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனருமான தேன்ராஜா நன்றி கூறினார்.

விழாவில் கோவில்பட்டி நகர்மன்ற துணை தலைவர் ராமர், கயத்தாறு இலக்கிய அணி செயலாளர் அல்லிக்கண்ணன், ஆக்டிவ் மைண்ட்ஸ் சேர்மராஜன், கணேசராஜா, நடராஜன், தமிழ்செல்வன், ஓட்டப்பிடாரம் அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் விஜயன், கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முருகேசன், கோபால், தொழிலதிபர் செல்வமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில் வெள்ளி விழா கொண்டாட்டம் தொடக்கம்

 
 தூத்துக்குடி மாவட்டம் உதயமாகி 25வது ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு மாவட்ட முழுவதும் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டியில் வரும் 8.10.12 வரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் த
...ொடக்க விழா கோவில்பட்டி செண்பகவல்லியம்மன், பூவநாத சுவாமி திருக்கோவில் முன்பு அமைந்துள்ள மின்னொளி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கோட்டாட்சியர் பொன்னியின்செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ருக்குமணி முன்னிலை வகித்தார். வெள்ளிவிழா கொண்டாட்டத்தினை கோவில்பட்டி எம்.எல்.ஏ.கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி வட்டாட்டசியர் நடராஜன்,பசும்பொன் அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம், தொழில் அதிபர் ஜேக்ப்ராஜாமணி, ராஜீ, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலமுருகன், விஜயராஜ், நகர்மன்ற உறுப்பினர் அருணாச்சலசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜெ.பெல்லா நன்றி கூறினார். பின்னா கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tuesday, 27 March 2012

Silver jubilee celebrations of Tuticorin district bifurcation





To begin with, a programme was organised on beach grounds of V.O. Chidambaranar Port here on Sunday. S.T. Chellapandian, Labour Minister, unveiled the silver jubilee logo in the presence of Collector Ashish Kumar.

Earlier, a mini-marathon was organised by Sterlite Industries to mark the occasion. Many participants of various age groups competed in the event, which began opposite St. Mary's Boys Higher Secondary School.
Cultural programmes were held.

Immediately after bifurcation, Tuticorin was called as V.O. Chidambaranar District but later it was renamed as ‘Thoothukudi District'. Tuticorin as a district is replete with historical and cultural heritage.
In the ancient period, many freedom fighters, poets, musicians and artistes of Tuticorin made their presence felt all over the world.

Heroic deeds of freedom fighters, including V.O. Chidambaram Pillai, Veerapandia Kattabomman, Tamil poet Barathi, Vellaya Thevan, Sundaralingam and Alagumuthu, who not only earned laurels for Tuticorin but for the entire nation.

Memorials and manimandapams of those involved in the freedom movement were built at various places across Tuticorin in recognition of their sacrifice.

Source -Hindu

தூத்துக்குடி துறைமுகம் கடற்கரையில் மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டம்! அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சிறப்புரை!!

தூத்துக்குடி மாவட்டம் பிறந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், தமிழக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். விபரம் பின்வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம் நெல்லை மாவட்டத்திலிருந்து தனியாக பிரிந்த பின்னர் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளிவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன் துவக்கமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் குறு நீள்ஓட்டப்போட்டி - மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

வெள்ளி விழா கொண்டாட்டத்தின் துவக்க விழா, 25.03.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 04.30 மணிக்கு, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் விழாவிற்குத் தலைமை தாங்கினார். இவ்விழாவில், ஆர்.பாக்யராஜ் இசையமைப்பில், எம்.இசக்கியப்பன் எழுத்தில், திரைப்பட பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடி தயாரிக்கப்பட்ட - தூத்துக்குடி மாவட்டத்தின் பாரம்பரிய சிறப்புகளை வெளிப்படுத்தும் விதத்திலான பாடல் குறுந்தகடு - சிடி வெளியிடப்பட்டது.

அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வெள்ளி விழாவையொட்டி நேற்று காலை நடந்த மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, வெள்ளி விழா சின்னத்தையும், பாடல் குறுந்தகட்டையும் வெளியிட, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா அவற்றைப் பெற்றுக் கொண்டார்.



பின்னர், மாவட்ட ஆட்சியர் தலைமையுரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:-



தென்கோடி நுழைவு வாயிலாகத் திகழும் துறைமுக நகரான தூத்துக்குடி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சாரம், பாரம்பரியத்தில் சிறந்து விளங்கியுள்ளது. அதற்கான சான்றுகள் ஆதிச்சநல்லூர் பகுதிகளில் கிடைக்கப் பெற்றுள்ளது.

விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் வாழ்ந்த பூமிதான் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். உப்பு தொழில், தீப்பெட்டி தொழில் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் இது. இங்கு அனைத்து சமயங்களின் ஏராளமான ஆன்மிக திருத்தலங்கள் உள்ளன.

இந்த வெள்ளி விழா கொண்டாட்டம் 7 மாதங்கள் நடைபெறும். வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சுற்றுலா தலங்களும், விளையாட்டுத்துறையும் மேம்படுத்தப்படும்.

புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவர். நாட்டுப்புற கலைகள் ஊக்குவிக்கப்படும். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும்.


இவ்வாறு, மாவட்ட ஆட்சியரின் உரை அமைந்திருந்தது. பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:- 



தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு என்ன கேட்டாலும் செய்து தருவதற்கு முதல்-அமைச்சர் தயாராக இருக்கிறார். தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சியில் முதன்மை மாவட்டமாக வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியர் ஒரு குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் அனைவரும் இடம்பெற்று ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த வெள்ளி விழா கொண்டாடத்தில் முதல்வரும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வேன். தூத்துக்குடி மாவட்டம் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனி பற்று உண்டு.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது போக்குவரத்து நெரிசல்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். தூத்துக்குடி சிறிய நகரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார். இது வரவேற்கத்தக்கது. வியாபாரிகளுக்கு சிரமம் கொடுக்காமல் இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேணடும் என்பது எனது விருப்பம்.


இவ்வாறு அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உரையாற்றினார்.

உரைகளைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் துவங்கின. தென்னக கலை - பண்பாட்டு துறை சார்பில் ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவியரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.  



 இவ்விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் உட்பட, பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.


 விழாவையொட்டி வஉசி துறைமுக கடற்கரை மைதானத்தில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சியும், சிற்றுண்டி விற்பனை அரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்த‌ன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜெந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா, திட்ட இயக்குநர் அருண்மணி, கடலோர காவல்படை கமாண்டர் ஆனந்தகுமார், ஜே.எஸ்.பி.சோனல் சந்த்ரா, காயல்பட்டினம் நராட்சி தலைவர் ஐ.ஆபிதா, முக்கிய பிரமுகர்களான ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், ஏ.வி.எம்.மணி, ராஜாசங்கரலிங்கம், லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் சாமுவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளி விழா ஆண்டு 10 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்கா திருச்செந்தூரில் உயரமான முருகன் சிலை அமைக்க முடிவு




தூத்துக்குடி, மார்ச்.27-

தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவையொட்டி 10 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்காவும், திருச்செந்தூரில் உயரமான முருகன் சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளிவிழா ஆண்டு

நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு முழுவதும் வெள்ளி விழா ஆண்டாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாவட்டத்தில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கோவில்பட்டியில் ஆக்கி மைதானம் அமைப்பது, திருச்செந்தூரில் சிறிய மைதானம் அமைப்பது, தருவை மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம், டென்னிஸ் போட்டிக்கு சிந்தடிக் மைதானம் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாவரவியல் பூங்கா

கோரம்பள்ளம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு விதமான தாவரங்கள் வைக்கப்பட உள்ளது. தருவைகுளம், திருச்செந்தூர் பகுதியில் கடற்கரை பூங்கா அமைக்கப்பட உள்ளது. கோவில்பட்டியில் ஒரு பூங்காவும், கதிரேசன் மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணப்பாடு பகுதியில் பாரா கிளைடர் சாகச பயிற்சி அளிக்கவும், பொதுமக்கள் கிளைடரில் பறக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

மேலும் சிங்கப்பூரில் உள்ள முருகன் சிலையை விட உயரமான ஒரு முருகன் சிலையை திருச்செந்தூரில் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு சிற்பியை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் 24 பேருக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ மூலம் 10 பேருக்கு ரூ.42 லட்சத்து 78 ஆயிரத்து 371 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பணியில் இருந்த போது இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆக மொத்தம் 45 பேருக்கு ரூ.46 லட்சத்து 18 ஆயிரத்து 771 நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷிஷ்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அமிர்தஜோதி, சிறப்பு திட்டங்கள் செயலாக்க தனித்துணை ஆட்சியர் கமலா ஆகியோர் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உருவாகி வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம்


தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு


தூத்துக்குடி, மார்ச்.26-

"தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து அனைவரும் செயல்பட வேண்டும்" என்று அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கூறினார்.

வெள்ளி விழா ஆண்டு


1986-ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உதயமாகியது. தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, நடப்பாண்டை வெள்ளி விழா ஆண்டாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தின் தொடக்கமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரையில் நேற்று மாலையில் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகர மேயர் சசிகலா புஷ்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருண்மணி வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது கூறியதாவது:-

வளர்ச்சி பணிகள்

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு என்ன கேட்டாலும் செய்து தருவதற்கு முதல்-அமைச்சர் தயாராக இருக்கிறார். தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சியில் முதன்மை மாவட்டமாக வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர் ஒரு குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் அனைவரும் இடம்பெற்று ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த வெள்ளி விழா கொண்டாடத்தில் முதல்-அமைச்சரும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வேன். தூத்துக்குடி மாவட்டம் மீது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தனி பற்று உண்டு.

இவ்வாறு அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

கலெக்டர்

விழாவில் கலெக்டர் ஆஷிஷ்குமார் பேசியதாவது:-


விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் வாழ்ந்த பூமிதான் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். உப்பு தொழில், தீப்பெட்டி தொழில் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் இது. ஏராளமான ஆன்மிக கோவில்களும் உள்ளன.

இந்த வெள்ளி விழா கொண்டாட்டம் இன்று (அதாவது நேற்று) தொடங்கி 7 மாதங்கள் நடைபெறும். வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும்.

புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள். நாட்டுப்புற கலைகள் ஊக்குவிக்கப்படும். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும்.

இவ்வாறு கலெக்டர் ஆஷிஷ்குமார் பேசினார்.

சி.டி. வெளியீடு


பின்னர் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வெள்ளி விழாவையொட்டி நேற்று காலை நடந்த மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வெள்ளி விழா சின்னத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்பு, பண்பாடு, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடியுள்ள சி.டி.யையும் வெளியிட்டார். சி.டி.யை மேயர் சசிகலா புஷ்பா பெற்றுக் கொண்டார்.

விழாவில் போலீஸ் இணை சூப்பிரண்டு சோனல் சந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்த ஜோதி, மகளிர் திட்ட அலுவலர் பெல்லா, உதவி கலெக்டர் லதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ருக்மணி, தாசில்தார் கலியுகவரதன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பி.கே.ரவி, ஓட்டப்பிடாரம் ïனியன் தலைவர் காந்தி என்ற காமாட்சி, ஆழ்வார்திருநகரி ïனியன் தலைவர் விஜயகுமார், காயல்பட்டினம் நகரசபை தலைவி அபிதா, தூத்துக்குடி நகர அ.தி.மு.க. செயலாளர் ஏசாதுரை, தொழில் அதிபர்கள் ஏ.வி.எம்.மணி, ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம், ராஜா சங்கரலிங்கம், சாமுவேல், ஸ்டெர்லைட் நிறுவன பொது மேலாளர் தனவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொன்மாணிக்கம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலைநிகழ்ச்சிகள்


தென்னக கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கல்லூரி, பள்ளிக்கூடங்களின் மாணவ-மாணவிகள் நடத்திய நடன நிகழ்ச்சியும் நடந்தது.

வ.உ.சி. கடற்கரை மைதானத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது.

Friday, 23 March 2012

தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டம் : நாளை துறைமுக கடற்கரையில் துவக்க விழா



தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்ட துவக்க நிகழ்ச்சி நாளை (25ம் தேதி) வஉசி., துறைமுக கடற்கரையில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் ஆஷிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்ட துவக்க விழா 25ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும், மாவட்ட தடகள சங்கமும் இணைந்து நடத்தும் மினி மராத்தான் போட்டி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்குகிறது. இப்போட்டியில் ஆண்கள், பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமியர் அனைவரும் பங்கு பெறும் வகையில் 8 விதமான போட்டிகள் நடக்கிறது. இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

வெள்ளி விழா கொண்டாட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி அன்று மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி.,துறைமுக கடற்கரையில் நடக்கிறது.
தூத்துக்குடி இசைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் நாதஸ்வர நிகழ்ச்சியுடன் தொடங்கும் இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமை வகிக்கிறார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

 விழாவில் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்பினையும், பண்பாட்டினையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் பிரபல திரைப்பட பின்ணணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடியுள்ள சிடி வெளியீட்டு விழாவும், அப்பாடலுக்கான நடன நிகழ்ச்சியும் நடக்கிறது. அத்துடன் தென்னக கலைப்பண்பாட்டு துறை சார்பில் ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவினையொட்டி வஉசி., துறைமுக கடற்கரை மைதானத்தில் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திபொருட்களின் விற்பனை கண்காட்சியும், சிற்றுண்டி விற்பனை அரங்கங்களும் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  தினமலர்

Wednesday, 21 March 2012

தூத்துக்குடியின் பெருமையை விளக்கி பாடல் வெள்ளிவிழா ஆண்டை ஒட்டி ஆசிரியர் இருவர் தயாரிப்பு




தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட வெள் ளி விழா ஆண்டை ஒட்டி மாவட்டத்தின் பெ ருமை குறித்து தனியார் பள்ளி ஆசிரியர் இருவர் பாட்டு தயாரித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் மூலம் பாடப்பட்டு சி.டியாக வரும் 25ம் தேதி வெளியிடுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் துவங்கி 25 ஆண்டுகள் நிø றவு பெற்று விட்டன. இந்த விழாவை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கö லக்டர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். வெள்ளி விழாவை பெரிய அளவில் நடத்துவதற்கு உள்ளாட்சி தேர்தல் வந்ததால் நடத்த முடியவில்லை. அதன் பின்னர் வெள்ளி விழா நிறைவினை பெரிய அளவில் நடத்த மாவட்ட கலெக்டர் ஆஷீ ஷ்குமார் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அதனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.

இந் நிலையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் நன்னடத்தை விதிகள் தூத்துக்குடி மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட்டதால் எந்த ஒரு அரசு நிகழ்ச்சியும் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.தற்போது தேர்தல் நன்னடத்தை வரும் 25ம் தேதியுடன் முடிவுக்கு வருவதால் அன்றில் இருந்து வெள்ளி விழா நிகழ்ச்சிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் அமர்களமாக நடக்க உள்ளது. வெள்ளி விழா ஆண்டின் துவக்கமாக வரும் 25ம் தேதி காலை மாரத்தான் ஓட்டத்துடன் துவங்குகிறது.

 மாலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடக்கிறது.இந்த விழாவை ஒட்டி தூத்துக்குடி சிறப்புகள் குறித்து தூத்துக்குடி தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பாடலாக எழுதியுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னைக்கு சென்று பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் மூலம் அதனை பாடலாக பாடி சி.டியை கொண்டு வந்துள்ளனர். இந்த சி.டி வரும் 25ம் தேதி மாலை நடக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் வரை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. அக்டோபர் 19, 20, 21ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நி றைவு விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது.இந்த வெள்ளி விழா வை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் எப்போதும் தூய்மையாக இரு க்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் பொழுது போக்கிற்கு புதிய பீச்கள் உருவாக்க வேண்டும். அரசுக்கு சொந்தமான கட்டடங்களை புதியதாக உருவாக்க வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்ட், மேம்பாலங்கள் உருவாக்குவதற்கும், மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தியடையும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்கும் வெள்ளி விழா ஆண்டில் மாவட்ட நிர்வாகம் அதிரடி திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி  : தினமலர்

 
-