தூத்துக்குடி மாவட்டவெள்ளி விழாபா டல்
இயற்றியவர்
அள்ளிஅள்ளிபூத்தொடுப்போம் - நாம்
துள்ளி வந்து பண் அமைப்போம்
தூத்துக்குடி மாவட்டத்தின் - நல்
வெள்ளி விழாபா தொடுப்போம்!
பொதிகைமலை உச்சியிலே புறப்பட்டு பொருநைசேரும்
வங்கக் கடலலைகள் வந்துமுத்தமிடும் சிங்கக்குணமாந்தர்
சிறப்புடனே வாழும் பொங்கும் பெருமையுடன்
தூத்துக்குடிமாவட்டம் வாழ்கவே!
(அள்ளிஅள்ளி)
உப்புவிளைவதனால் உணர்வுகள் மேலோங்க
உரஆலைகள் இருப்பதனால்,வேளாண்விளைவும் செழித்திட
தீப்பெட்டித் தொழிலதுதினந்தோறும் வளர்ந்துவர
புதியதுறைமுகப் பொலிவால் மேன்மையுற
நவீனக் கோலம் கொண்ட தூத்துக்குடிவாழ்கவே!
(அள்ளிஅள்ளி)
கொற்கைகாயல் முருகன் கோவில் உள்ளசெந்தூர்
உவரிமணப்பாடு உடன்குடி என விரிந்து
சாத்தான் குளம் தனைச் சார்ந்த திருவைகுண்டம்
சுதேசிக்குரல் ஒங்கி உயர்ந்த ஓட்டப்பிடாரம்
எட்டாத உயரத்தில் இருந்ததமிழ் கவிதையை
கவிதையாவருக்கும் பொதுவென்றஎட்டயபுரம்
உட்கொண்ட தூத்துக்குடிமாவட்டம்
(அள்ளிஅள்ளி)
அன்புருகவந்தோரைஅரவணைக்கும்
செண்பகத்தாய் சேர்ந்தகோவில்பட்டி
பனிமயமாதாபவனிவரும் பழையதுறைமுகம்
கொண்டதோர்மாவட்டமாம்
தூத்துக்குடியைகும்பிட்டுவாழ்த் துவோம்!
(அள்ளிஅள்ளி)
மீன் வளம் நிறைந்தும்,மின் வளம் பெருகியும்
குறிஞ்சி முல்லைமருதம் நெய்தல்
எனஐவகைநிலமும் ஒருசேரஅமைந்த
தமிழக அற்புத பூமியாம்
தூத்துக்குடிமாவட்டம் அன்னைபாரதத்தில்
இன்னும் சிறந்திடவே
அனைவரும் வாழ்த்துவோம்
(அள்ளிஅள்ளி)

0 comments:
Post a Comment