Friday 10 August 2012

மாபெரும் செல்லப் பிராணிகள் கண்காட்சி



தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாகி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 26.08.2012 அன்று மாலை 03.00 மணியளவில் தூத்துக்குடி, முத்துநகர் கடற்கரையில் வைத்து கால்நடை பராமரிப்புத்துறையினரால் மாபெரும் செல்லப் பிராணிகள் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.  இந்தக் கண்காட்சியில் பொது மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளைக் கொண்டு வந்து சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  சிறப்பாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்படும்.

         இக்கண்காட்சியில் தங்கள் செல்லப் பிராணிகளுடன் கலந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்கள் கீழ்காணும் முகவரிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

1)    உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, தூத்துக்குடி
                                    கைபேசி எண். 9445032545
2)    பிரதம மருத்துவர், கால்நடை மருத்துவபெருமனை, தூத்துக்குடி
                                     கைபேசி எண். 9445032604
3)    உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, திருச்செந்தூர்
                                     கைபேசி எண்.9842126189
4)    உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கோவி;ல்பட்டி
                                       கைபேசி எண்.9443002374
5)    கால்நடை மருத்துவர், கால்நடை மருத்துவமனை, ஸ்ரீவைகுண்டம்.
                                        கைபேசி எண்.9443463320

0 comments:

Post a Comment

 
-