Sunday 11 March 2012

தூத்துக்குடி மாவட்டவெள்ளி விழாபாடல்-2

 இயற்றியவர்
V.R. Raguraman
Synchro Design P. Limited.
பல்லவி
--------------

மண்ணில் பெருமை கொள்வோம்! நாம் பிறந்த மண்ணில் பெருமை கொள்வோம்! 
இயற்கை வளத்தில் நிறைந்தவர் நாமென்றே பெருமை கொள்வோம் நாமே! 
சரித்திரம், கலைகள், வளர்த்தவர் நாமென்றே பெருமை கொள்வோம் நாமே!
சுதந்திர தாகத்தை விதைத்தவர் நாமென்றே பெருமை கொள்வோம் நாமே!
தொழில்முனைவோரில் முன்னணி நாமென்றே பெருமை கொள்வோம் நாமே! 

சரணம் - 1
-----------------
மொழியையும் கலையையும் காத்த சமணர் குகைகள் இங்கிருக்கு!
வழியாய் துணையாய் மீனவர் காக்கும் மாதா கோவிலும் இங்கிருக்கு!
கடலலை பணிவுடன் முருகனை வணங்கும் திருச்செந்தூரும் இங்கிருக்கு!
நபிகள் நாயகத்தை துதிக்கும் காயலில் பள்ளிவாசல்கள் பல இங்கிருக்கு! (மண்ணில்)

சரணம் - 2
-----------------
கப்பங்கட்ட மறுத்த கட்டபொம்மனைத் தந்த பெருமையும் எங்களுக்கே! 
கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனாரைத் தந்த பெருமையும் எங்களுக்கே!
வெண்முண்டாசுக் கவிஞன் பாரதியாரைத் தந்த பெருமையும் எங்களுக்கே!
மும்மூர்த்தியிலொருவர் முத்துசாமி தீட்சிதரை தந்த பெருமையும் எங்களுக்கே!  (மண்ணில்)


சரணம் - 3
-----------------
இயற்கை அணிவித்த ஆபரண முத்துக்கள் விளைவதும் எம்மண்ணிலே!
நெருப்புக் குச்சியை பெட்டிப் பாம்பென அடக்கியாள்வதும் எம்மண்ணிலே!
உடுத்தும் ஆடைக்கு ஊடும் பாவுமாய் நூல்ச்சரத்தை நூற்பதும் எம்மண்ணிலே!
பரந்த கடலிலே வணிகம் செழித்திடும் கப்பல் துறைமுகம் எம்மண்ணிலே! (மண்ணில்)

சரணம் - 4
-----------------

அள்ளக்குறையாத வலைகள் தாங்காத மீன்வளமுள்ள மண்ணடா!  
வெள்ளை மனதென கெடுதல் நினையாத உப்பு விளைகிற மண்ணடா!
செல்லகுழந்தையாய் தவழ்ந்து திரிந்திடும் பரணி பாய்கிற மண்ணடா!
இந்தியா ஒளிர்ந்திட அனலாய் தகித்து சக்தியைத் தருகிற மண்ணடா!
நம் தூத்துக்குடிமண்ணடா!

மண்ணில் பெருமை கொள்வோம்! நாம் பிறந்த மண்ணில் பெருமை கொள்வோம்! 




0 comments:

Post a Comment

 
-