Wednesday 1 August 2012

புகைப்பட கண்காட்சி:


தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெறும் புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டிக்கு புகைப்படங்களை வருகிற 8ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார்வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட நடிர்வாகம் சார்பில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வாரந்தோறும் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள், இலக்கிய போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் வெள்ளி விழா புகைப்பட போட்டி, புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது. வெள்ளி விழா சிறப்பை குறிக்கும் வகையிலான போட்டோக்கள், மாவட்டத்தின் இயற்கை காட்சிகள், சுற்றுலா, அரிய புகைப்படங்கள் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில பங்கேற்க விரும்புவோர் தாங்கள்எடுத்த புகைப்படங்களை மேற்கண்ட பிரிவு வாரியாக அகஸ்ட் 8ம் தேதிக்குள் tpc@live.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

புகைப்படங்களில் தங்களது, பெயர் முகவரி, செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதோடு, வெள்ளிவிழா வெள்ளிவிழா புகைப்பட கண்காட்சியில் இந்த புகைப்படங்கள் இடம்பெறும் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
-